சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் – வடக்கு, கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் சந்திப்பு

சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவிற்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று 05.08 அன்று விஜயராம மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, மகிந்த பேசுகையில், தமிழ் மக்கள் மத்தியில் போலியான வாக்குறுதிகள் வழங்குவதை அனைத்து அரசியல் கட்சிகளும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தற்போதுள்ள அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் அவை எதையும் நிறைவேற்றவில்லை.

இந்த சந்திப்பில் ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன், டியு குணசேகர, திஸ்ஸ விதாரண, ராஜா கொல்லுரே, அருண் தம்பிமுத்து, ரி.சிறிதரன், பி.உதயராசா, வரதராஜப் பெருமாள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளதால் பல சிங்களக் கட்சிகள் தமிழ் மக்கள் மீது அதிக அக்கறைகள் காண்பிப்பது போல நாடகமாடும் தமது படலத்தை ஆரம்பித்துள்ளன.