மீண்டும் புனரமைக்கப்படும் கிட்டு பூங்கா

கடந்த 28 ஆம் திகதி விசமிகளால் எரியூட்டப்பட்ட கிட்டுப்பூங்காவின் முகப்பினை மீளவும் புனரமைப்பு செய்கின்ற வேலைகளை உடனடியாக யாழ்.மாநகர சபை ஆரம்பித்துள்ளது.
எமது அடையாளம் எமது வரலாறு என்பதற்கமைவாக தற்போது யாழ்.மாநகர சபை பணியாளர்களினால் குறித்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.