மாமனிதர் கவிஞர் நாவண்ணன் நினைவுகள்…

இவர் 1948 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் பிறந்தார் தனது இளமை வாழ்க்கையை யாழ். இளவாலையிலே தொடங்கினார். ஒரு கவிஞனாக உருவெடுத்த நாவண்ணன், எமது மக்களுக்குள் எழுந்த ஈழ விடுதலையின் சுவாலையை வீறுகொண்டு எரிய வைக்க கவிதை வடிவிலும் பாடல்கள் வடிவிலும் நகைச்சுவை வடிவங்களிலும் தன் வரிகளை எழுதினார். எதிரியின் யாழ். மீதான ஆக்கிரமிப்பால் வன்னி வந்த இவர் வன்னியில் எதிரியின் படையை விரட்டிப் புலிகளின் படையணிகள் புது வரலாறு படைப்பதற்கு தோளேடுதோள் கொடுத்தவர்.

போராட்டப்பாதையில் அவரின் இளமைக்காலத்திலிருந்தே இறுதிக்காலம் வரை ஓயாது இயங்கினார். எமது போராளிகள், மக்கள் செய்த தியாகங்களை- அற்பணிப்புக்களை- சாதனைகளை- அவர்கள் சந்தித்த இழப்புக்களை பதிவுகளுள் செலுத்த வேண்டுமென்பதில் துடியாக துடித்தவர்.

அதற்காக ஊர், ஊராகத்திரிந்து இரவு பகலாக அலைந்து குடிசைகளிலும் கடற்கரைகளிலும் படுத்துறங்கி அவர்களின் வாழ்வை தன்வாழ்வாக்கி உணர்வுகளை வரைந்தார். அத்தோடு, நெருப்பாற்றில் நீச்சலிடும் விடுதலைப் போரின் வீச்சுமிக்க பக்கங்களை வெற்றிகளை எழுத்துருவில் மட்டுமல்லாது ஒலிநாடாக்களிலும், இசைத்தட்டுக்களிலும் பதிவு செய்வதற்காகவும் துடிப்பார். ஓர் கவிஞனாக மட்டுமல்லாது ஓர் ஓவியனாகவும், சிற்பியாகவும், நாவலாசிரியராகவும் தன் உணர்வுகளை பதிவுகளை பல்வேறு வடிவங்களிலும் ஆவணமாக்கினார்.

இவருடைய தாய் மண்ணின் பற்றின் சான்றுகள் தமிழீழ மண்ணிலும் இன்றும் தமிழர் மனங்களிலும் என்றும் நிலைத்து நிக்கின்றன சில கவிஞர்கள் வெறும் எழுத்துக் கவிஞர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் வாழ்வு என வருகையில் தாமும் தமது குடும்பமும் பாதுகாப்பாக இருந்து கொண்டு மற்றவர்கள் போராட வேண்டும் என நினைப்பார்கள். தாம் ஒதுங்கிவிடுவர் இவர் போராட்டத்தின் பதிவுகளை தனது எழுத்துக்கள், பேச்சுக்கள், ஒவியம் சிற்ப்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர்.12990916 10156633588255012 6895878018566292254 n மாமனிதர் கவிஞர் நாவண்ணன் நினைவுகள்...

“கவிஞர் நாவண்ணன்” தமிழன் சிந்திய இரத்தம், கரும்புலி காவியம், இனிமைத் தமிழ் எமது, ஈரமுது , உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தை பிடித்து கொண்டவர். இவரால் தயாரிக்கப்பட்ட “வலியும் பழியும்” என்ற பிரமாண்டமான நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளில் தயாரித்த “கரும்புலிகள் காவியத்தை” நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம் சிற்ப்பம் ஆகிய வற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செயற்ப்பட்டார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதஙக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். 1998 ம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாக செயற்ப்பட்டமைகாககவும் அதன் பின்னர் “கவியம் நூல்” உருவாக்கம் கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் கெளரவிக்கப்பட்டார்.

எம் தேசத்தின் வாழ்வோடு ஒன்றிணைந்திருந்த இவரது குடும்பத்தில் ஐந்து பெண் பிள்ளைகளிற்கு ஒரேயொரு ஆண் மகனாக இருந்த “சூசைநாயகம் கிங்சிலி” உதயன் 2 லெப். கவியழகன் என்பவர் இத்தேசத்தின் பயணத்தில் இணைந்து இறுதிவரை களமாடி மாவீரரானார். அதனாலும் மனம் தளராது வீர மறவனைப் பெற்றேடுத்தேன்- அவனை வீர புத்திரனாய் மண்ணிற்குள் விதைத்தேன் என்ற தன் உயிர்ப்பிரிவின் உணர்வை இலக்கியமாக படைத்தார்.

இவரின் முதுமைக்காலத்தில் புலிகளின்குரல் வானொலியிலும். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியிலும் தன் ஆற்றலினூடாக பல்வேறு நிகழ்வுகளை உலகுக்கும் உணத்தினார். இவரின் ஆற்றலிற்காக எம் தேசியத் தலைவர் அவர்களிடம் இருமுறை விருதுகள் பெற்றார். இறுதியில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்துபோன எம் உறவுகளை நினைந்துருகி “ஆழிப்பேரலையின் சுவடுகள்” என்னும் அரிய நூல் ஒன்றையும் எழுதினார்.

காலத்தின் சுழற்சியோடு தன் வாழ்க்கையை ஒன்றிணைத்து என்றுமே, எப்போதுமே தன் படைப்பின் மூலம் நினைவுகளைப் புரட்டிப்பார்க்க விட்டுச்சென்ற ஓர் உன்னத மனிதன் கவிஞர் நாவண்ணன். அப்படிப்பட்டவர் மத்தியில் தான் மட்டுமன்றி தனது அருந்தவ புதல்வனையும் மண்ணிற்கே ஈகம் செய்தவர் கவிஞர் நாவண்ணன் அவர்கள். பல மாவீரர் பாடல்களை எழுதி எமக்காக உணர்வு ஏந்தித் தந்தவர்.

கவிஞர் நாவண்ணன் அவர்களின் புதல்வன் லெப்.கவியழகன் (சூசைநாயகம் கிங்சிலி உதயன்)16-05-1997 அன்று வவுனியா நெடுங்கேணியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்தார். ஈழத்தின் மூத்த கவிஞர் நாவண்ணன் 15.04.2006 அன்று மரணமடைந்தார். ஈழத்தின் மூத்த கவிஞர் திரு.நாவண்ணன் அவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் “மாமனிதர்” விருது வழங்கி கௌரவிக்கபட்டது.First Female Martyr Malathy Shrine Kilinochchi 01 மாமனிதர் கவிஞர் நாவண்ணன் நினைவுகள்...

எழுத்துத் துறையோடு ஓவியம், சிற்பம் போன்றவற்றிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். கற்சிலை மடுவில் நிறுவப்பட்டிருந்த கம்பீரமான பண்டாரவன்னியன் சிலை, மாங்குளத்தில் நிறுவப்பட்டிருந்த கரும்புலி போர்க்கின் சிலை, கிளிநொச்சி 155ம் கட்டையில் அமைக்கப்பட்டிருந்த முதற் பெண் மாவீர்ர் மாலதியின் சிலை போன்றன இவர் செதுக்கிய சிற்பங்களே.

மானிப்பாய் அந்தோனியார் ஆலய முன்றலில் யேசுக் கிறீஸ்துவின் சிலை, மல்வம் வாசிகசாலையில் சுவாமி ஞானப்பிரகாசர் சிலை,வங்காலையில் அருட்திரு பஸ்ரியன் சிலை, மன்னார் மாதா கோவில் முன்றலில் அருட்சகோதர்ர். டிலாசாலும் இரு சிறுவர்களும் நிற்கும் சிலை போன்றன இன்றும் கவிஞர் நாவண்ணணின் கலைத்திறனை நிரூபிக்கும் அவரது சிற்பங்களாகும்.

இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்

1- 1972 இறுதி மூச்சு
2- 1976 தமிழன் சிந்திய இரத்தம்-(1958 இனக்கலவரம் பற்றியது)
3- 1976 புத்தளத்தில் இரத்தக்களம் -(1976ல் நடந்த சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் பற்றியது)
4- 1978 பயணம் தொடர்கிறது (நாவல்)
5- 1988 நானொரு முற்றுப்புள்ளி (சிறுகதைத் தொகுப்பு)
6- 1988 தீபங்கள் எரிகின்றன (தனி மனித வரலாறு)
7- 1989 இத்தாலியன் தந்த இலக்கியத்தேன் (இலக்கியம்)
8- 1992 கதை-கண்ணீர்- கவிதை (மலையக மக்கள் தொடர்பான குறுங்காவியம்)
9- 1989 நினைவாலயம் (குறுநாவல்)
10- 1994 பொழிவு (அரங்கக் கவிதைகள்)
11- 1995 எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன
12- 2002 கரும்புலி காவியம் -பாகம் 1
13- 2005 சுனாமிச் சுவடுகள்

எழுதி முடிக்கப்பட்ட வெளிவராத நூல்கள்
வலிகாமம் இருந்து வன்னி வரை
குருதியில் நனைந்த திருவடிகள்
வித்தான காவியம்
முல்லை அலை விடு தூது (தூதுப் பிரபந்தம்)

இறுதி மூச்சு வரை எழுதும் முயற்சியில் இருந்தது – புலம்பெயர்ந்த ஈழத்து உறவுகளின் வரலாறு
2006 ஏப்பிரல் 15ம் திகதி நோயுற்ற நிலையில் எழுத வேண்டும் என்ற தாகத்தோடேயே இவரது இறுதி மூச்சும் காற்றில் கலந்தது.

விடுதலைப்போராட்டத்தை வேகப்படுத்திய பெரும் எழுதுகோல் பிடித்த மாமனிதர், கவிஞர் , நாவண்ணன் அவர்களும் போற்றி வணங்கப்படவேண்டியவரே..

நினைவுப்பகிர்வு
ஈழமகன்.