மலையகத் தலைவர்களை சந்தித்த இந்தியத் தூதுவர்

இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழ் சமூகத்தின் அரசியல் தலைவர்களை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் சந்தித்து உரையாடினார்.

கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் நேற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது தமிழ்ச் மூகத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்திக்கான திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் பெருந்தோட்ட மக்களின் நலனுக்கான அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் இந்தியா உறுதியாக நிற்கும் என்று இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.