மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமான செயல் ட்ரம்ப் வேதனை

கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளெய்டின் மரணத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் போது, இனந்தெரியாதவர்களால் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமானது என ட்ரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த 2ஆம் திகதி இரவு வோஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் அமைந்துள்ள வீதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலை இனந்தெரியாத விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து இந்தியத் தூதரகம் புகார் அளித்துள்ளது.

சேதப்படுத்தப்பட்ட சிலை புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமான செயல் என செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ட்ரம்ப் இன் இந்திய விஜயத்தின் போது சபர்மதி ஆசிரமத்திற்கு பிரதமர் மோடியுடன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.