பௌத்த நாடுகளின் உதவியுடன் ஜெனிவாவை சமாளிக்க முடியும் – தேரர்கள் ஆலோசனை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கு பௌத்த நாடுகளின் உதவியை தேரர்களின் ஊடாக நாடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இந்த ஆலோசனையைப் பிரதமருக்கு வழங்கினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் சிறிலங்காவுக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று மஹாசங்கத்தினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே நேற்று முன் தினம் பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே இவ்வாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அபயதிஸ்ஸ தேரர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் நோக்கம் நாட்டைப் பிரிப்பதே. மனிதாபிமான முறையின் கீழ் பயங்கரவாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதை போர்க்குற்றம் என்று கூறுவது பாரிய குற்றமாகும் என்று குறிப்பிட்டார்.