போதைக்கு எதிராக மாணவர்கள் ஊர்வலம்

அதிகரித்துவரும் போதைப்பொருளை கட்டுப்படுத்தக்கோரி இன்று வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.

சமுதாய பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் சமுதாய பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இவ் ஊர்வலமானது பாடசாலை முன்றலில் ஆரம்பமாகி வைத்தியசாலை சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

இதன்போது மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதையை ஒழியுங்கள் உட்பட போதைக்கு எதிரான வாசகங்களை தாங்கிய பதாதைகளையும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.
DSC00427 போதைக்கு எதிராக மாணவர்கள் ஊர்வலம்

DSC00410 போதைக்கு எதிராக மாணவர்கள் ஊர்வலம்