பிரித்தானியாவின் எண்ணைக் கப்பலை ஈரான் சிறைப்பிடித்துள்ளது

தமது படையினர் கொமூஸ் நீரிணையின் ஊடாக அனைத்துலக சட்டவிதிகளுக்கு புறம்பாக பயணம் செய்த பிரித்தானியாவின் எண்ணைத்தாங்கி கப்பலை சிறைப் பிடித்துள்ளதாக ஈரானின் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்பாதுகாப்பு பிரிவு மற்றும் கொர்மோகன் துறைமுக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே அனைத்துலக கடல்சார் விதிகளை மீறிப் பயணம் மேற்கொண்ட பிரித்தானியாக் கப்பல் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்ட எண்ணைக்கப்பல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஈரான் கடற்படையினரின் சிறிய ரக கடற்படைக் கப்பல்களும், உலங்குவானூர்தியும் இந்த நடவக்கையில் ஈடுபடிருந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஸ்ரேனா இம்பிரோ என்ற தமது கப்பலுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது உள்ளதாக சுவிற்சலாந்தைச் சேர்ந்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமது கப்பல் பிரித்தானியாக் கொடியுடன் பயணம் செய்தபோது காணாமல்போயுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இந்த கப்பலில் 23 மாலுமிகளும் பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் தற்போது தோன்றியுள்ள இந்த பதற்றத்தால் எண்ணியின் விலை உலகில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.