பயங்கரவாத தடுப்புப் பிரிவில் உள்ள 16 பேருக்கு கொரோனா – அதிகாரிகள் தனிமைப்படுத்தல்

வவுனியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஒருவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஏனையவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்குள்ள அதிகாரிகள் பலரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.