படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 12 நினைவு தினம் அனுஸ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 12வது நினைவு தின நிகழ்வு இன்று(08-0102021) மட்டு ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG 20210108 WA0519 படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 12 நினைவு தினம் அனுஸ்டிப்பு

குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னால் பா.ம.உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான அரியநேந்திரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தி. சரவணபவன் மற்றும் மாவட்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG 8100 படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 12 நினைவு தினம் அனுஸ்டிப்பு

இன் நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி கோரி அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் லசந்த உட்பட படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.