பல்கலை நினைவுத்தூபி சட்டவிரோதம்; பல்வேறு அழுத்தங்களால் உடைத்தோம் – துணை வேந்தர்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றுமாறு தொடர்ச்சியான பல்வேறு அழுத்தங்கள் எம் மீது பிரயோகிக்கப்பட்டு வந்தன. அதற்கமைய அந்த நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டது.

இவ்வாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா நேற்றிரவு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே இந்த முடிவுக்குச் செல்ல நேர்ந்தது. பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்காவிட்டிருந்தால் வேறு தரப்புக்கள் உள்நுழைந்து அந்த நினைவுத்தூபியை அகற்றியிருக்கக்கூடும் என்பதாலும், அவ்வாறு நடைபெறுவது பல்கலைக்கழகத்துக்கு அழகல்ல என்பதாலுமே நாம் இவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்தோம்” என்றார்.