நியூசிலாந்தில் இருந்து ஜெர்மன் மாலுமிகள் நாடுகடத்தல்?

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக நியூசிலாந்தில் எல்லைக்கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், அந்நாட்டு எல்லைக்குள் முறையான அனுமதியின்றி படகில் நுழைந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாலுமிகள் விரைவில் நாடுகடத்தப்பட இருப்பதாக நியூசிலாந்து குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது.

சொரோனா சூழலினால், படகு வழியாக வருபவர்களுக்கு அனுமதி மறுத்து வரும் நியூசிலாந்து அரசு, படகு பழுதுப் பார்த்தல், மனிதாபிமான அவசரநிலைகளுக்கு மட்டும் விலக்களிக்கிறது.

Automatic Identification System தகவலின் அடிப்படையில், இப்படகு French Polynesia பகுதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு கிளம்பியிருக்கிறது. அதாவது, நியூசிலாந்து எல்லைக்கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்ட பின்னர் இப்படகு பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் மனிதாபிமான அவசரநிலைகள் அடிப்படையிலும் இப்படகிற்கு விலக்களிக்கப்படவில்லை.