இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்டமை குறித்து கவலையடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவிவிக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியிலிருந்து தமிழர்களை நாடு கடத்துவதை நிறுத்துமாறு நாங்கள் வேண்டுகோள் விடுத்தபோதிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் அவர்கள் கண்காணிக்கப்படுதல் தடுத்துவைக்கப்படுதல் சித்திரவதை போன்ற ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி மனித உரிமைகளை நிலைநாட்ட தவறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.