நல்லிணக்கம் பற்றி பேசும் தார்மிக தகுதி முஸ்லீம் அரசியல்வாதிகருக்கு இருக்கிறதா? பாராளுமன்றத்தில் வியாழேந்திரன்

நல்லிணக்கம் என்பது வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசுவதாலோ, ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதாலோ, பாராளுமன்றத்தில் பேசுவதாலோ வந்துவிடுவதில்லை . செயற்பாட்டு ரீதியாக வரவேண்டும். இன்று பேச்சளவில் கூட முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் நல்லிணக்கத்தை காண முடியாத துர்ப்பாக்கிய நிலமை இருக்கின்றது. இதற்கு சில உதாரணங்களை முன்வைக்க முடியும்

உண்மையிலே கடந்த மூன்று தசாப்த காலத்தில் எமது தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு உடப்ட இலங்கையின் பல பகுதிகளில் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதில் உச்சக்கட்டமாக 2009. இந்த நிலையில் எந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளாவது இது தொடர்பாக எழும்பி பேசினார்களா? இதை எதிர்த்துப் பேசினார்களா? இல்லை . மாறாக கொடியைப் பறக்கவிட்டு கொண்டாடினார்கள். இந்த நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்பட போகிறது?

வடக்கு கிழக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்று MLA ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் பேசிய போது அத்தனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனமாக தான் இருந்தீர்கள். ஒருவராவது எழும்பி இவருடைய கருத்தை எதிர்த்து பேசினார்களா? இல்லை. உங்களுடைய மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி. ஆகவே இந்நிலையில் எப்படி நல்லிணக்கம் ஏற்படப்போகிறது?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த சொல்லி இந்த நல்லாட்சியில் கூட எத்தனை எத்தனை மக்கள் போராட்டங்கள் முன்னெடுத்தார்கள். இன்று அவர்கள் 30 வருடத்திற்கு மேலாக முன்னெடுக்கின்ற உண்மையான ஏற்றுக் கொள்ளக்கூடிய யதார்த்த பூர்வமானபோராட்டத்திற்கு யாராவது ஒரு முஸ்லிம் அரசியல் வாதியாவது ஆதரவாக பேசியது உண்டா? இல்லை.இன்று அம்பாறையில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கருத்தை ஏற்றுக் கொண்டு இருக்கின்றீர்கள்.

இந்த நல்லாட்சி காலத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 11 இந்து கோயில்கள் எல்லைப்புறங்களில்உடைக்கப்பட்டிருக்கின்றன. மாட்டினுடைய அதாவது பசு கன்று வெட்டப்பட்டு மூலஸ்தானத்தில் வீசி எறியப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு பல உதாரணங்களை சொல்ல முடியும்.இன்று அந்த மாவட்டத்திலே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய தேசியக் கட்சியிலும் தமிழ் மக்களின் வாக்குகளையும் சேர்த்து பெற்றுக்கொண்டு அமைச்சர்களாக வந்து பாராளுமன்றத்தில் இருக்கின்ற எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ? எந்த முஸ்லிம் அமைச்சர்? இந்த செயற்பாட்டை கண்டித்துப் பேசினார்கள்? பேசவில்லை. இந்த நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்பட போகிறது?

இது மாத்திரமா அம்பாறை மாவட்டத்தில் ஒலிவில் மீனாட்சி அம்மன் ஆலயம், தீகவாவி சிவன் ஆலயம், நிந்தவூர் பிள்ளையார் ஆலயங்கள் உடைக்கப்பட்ட போதும், காணி தினம் அபகரிக்கப்படும் போது இது தொடர்பாக குரல் எழுப்பும் போது இதற்கு சார்பாக யாராவது பேசினார்களா இல்லை, மௌனமாக இருக்கின்றீர்கள் இருந்தீர்கள். உங்கள் கண்களில் வந்தால் இரத்தம் . எங்கள் கண்களில் வந்தால் தக்காளி சட்னியா? ஆகவே இந்த மௌனம் எதைக் காட்டுகிறது? இந்த நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்பட போகின்றது.?

ஆகவே நல்லிணக்கம் என்பது நீங்கள் பேச்சளவில் கூட கடந்த காலங்களில் நீங்கள் காட்டவில்லை. ஏன் நிகழ்காலத்தில் கூட உங்களிடத்தில் பேச்சளவில் கூட நல்லிணக்கத்தை காணவில்லை. ஆனால் இன்று நீங்கள் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு பின்பு நல்லிணக்கத்தை பற்றி பேசுகிறீர்கள். ஆனால் இன்று எங்கள் மத்தியில் இருந்து கொண்டு உங்களுக்காக எங்கள் தலைமைகள் நல்லிணக்கத்தை பற்றி பேசுகின்றன.

உண்மையிலேயே உண்மையான நல்லிணக்கம் என்பது பேச்சிலும் பேச்சிற்கப்பால் செயற்பாட்டிலும் இடம் பெறவேண்டும். இன்று உங்களிடம் பேச்சிலும் இல்லை. செயற்பாட்டிலும் இல்லை. ஆகவே அந்த நிலை ஏற்படும் போது தான் இந்த நாட்டிலே ஒரு சிறந்த நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டு என நான் இந்த உயரிய சபையிலே தெரிவித்துக்கொள்கின்றேன்.

உண்மையிலேயே உங்களுக்கு சவால் விடுகின்றேன் யாராவது கடந்த காலத்திலே தமிழ் மக்கள் பல வகையிலும் பாதிக்கப்பட்ட போது அவர்களுடைய நில வளங்கள் அபகரிக்கப்பட்ட போது சூறையாடப்பட்ட போது யாராவது இதற்கு எதிராக இலங்கையில் எந்த பகுதியிலும் இருந்து எந்த முஸ்லிம் தலைமைத்துவமும் குரல் கொடுத்ததா? இல்லை அப்படி இருந்தால் நான் சவால் விடுகின்றேன் எழும்பி கூறுங்கள்.

உங்களால் முடியாது. ஆகவே கடந்த காலங்களில் பள்ளிவாசல் உடைக்கப்பட்ட போது பன்றி உடல் வெட்டிப் போடப்பட்ட போதும் நீங்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக தான் இருந்தீர்கள். உங்களுக்காக நாங்கள் பரிந்து பேசினோம். அதற்காக குரல் கொடுத்தோம். அதற்காக தமிழ் தலைமைகள் குரல் கொடுத்தன.

ஆகவே கடந்த காலத்தில் 7 ஆசனங்களை கொண்ட முஸ்லிம் காங்கிரசுற்கு 11 ஆசனங்களை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்துக் கொடுத்தது. இது மாத்திரமல்லவடமாகாணத்தில் அஸ்மீர் என்று சொல்லக்கூடிய ஒருவருக்கு மாகாணசபையில்கூட அவருக்கு மாகாண சபை உறுப்பினர் என்ற அந்தஸ்தை வழங்கியது.