நாட்டில் இரத்த ஆறு ஓடும் – அன்று ஹிஸ்புல்லா, நாட்டில் பாரிய அழிவு ஏற்படும் – இன்று அசாத் சாலி

இஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி எச்சரித்துள்ளார்.

பாதுகாப்புப் பிரிவினர் ஒரே முஸ்லிம் பள்ளிவாசலில் மேற்கொள்ளும் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு தான் பாதுகாப்பு சபையில் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முன்னராக ‘வடக்குக்கிழக்கு இணைந்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடும்’
என தற்போதைய கிழக்குமாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா குறிப்பிட்டிருந்தமை நாமறிந்ததே.