பிபிசி க்கு எதிராக தமிழர்கள் போராட்டம்

தமிழீழ விடுதலைப்போரையும் அதன் தலைமையையும் கொச்சைப் படுத்தியதாகக் கூறி லண்டனை உள்ள பிரித்தானிய ஒலிபரப்புச் சேவைக்கு எதிராக தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 18 .05 .2019 அன்று உலகத்த தமிழர்களால் நினைவுகூரப்பட்ட
இனவழிப்பு நாளையொட்டி பிபிசி யின் தமிழ் பிரிவு இரு காணொளிகளை வெளியிட்டிருந்தது. இக்காணொளிகள் தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றை மலினப்படுத்துவதாகவும்,உண்மைக்குப் புறம்பான விடயங்களை கொண்டிருந்ததாகவும் தமிழர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதனைக்கண்டித்து தாம் இலண்டனில் இந்த போராட்டத்தை நடத்துவதாவும், இனத்தின் மேதகு தேசியத் தலைவரையும், தேசவிடுதலை வீரர்களையும் அவர்களின் தர்மத்தின் வழியிலான ஆயுத போராட்டத்தையும் எவராயினும் இனிக் கொச்சைப்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டோர் தெரிவித்தனர். இது போன்ற போராட்டங்கள்
புலம்பெயர் தேசமெங்கும் நடைபெற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.FB IMG 1558727574485 1 பிபிசி க்கு எதிராக தமிழர்கள் போராட்டம்