ரணில் விக்கிரமசிங்க சீன தூதுவரை சந்தித்தார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன தூதுவர் செஞ்சியா இற்குமிடையிலான சந்திப்பொன்று இன்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பில், இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், சுற்றுலா, கலாசாரம், மற்றும் தீவிரவாத முறியடிப்புத் துறைகளில் எவ்வாறு ஒத்துழைப்பது என்பது பற்றி ஆராயப்பட்டது. அத்துடன் ஆசிய நாகரீகங்களின் மாநாடு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சீனத் தூதுவர் விளக்கமளித்துள்ளார்.