தேசிய புலனாய்வுத்துறையின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க

மேஜர் ஜெனரல் ஜெவேகா ருவன் குலதுங்க சிறிலங்கா ஜனாதிபதியால் தேசிய புலனாய்வுத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னராக இப்பதவியை வகித்த சிசிர மெண்டிஸ் பதவி விலககியதையடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 19984 இல் படைத்துறை சேவையில் இணைந்த ருவன் குலதுங்க, 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 16 சிறிலங்கா இலககு காலாட்படையின் இரண்டாம் லெப்டினென்ட் ஆக நியமிக்கப்பட்டார்.

போர் நடைபெற்ற காலங்களில் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையான 53 காலாட்படை பிரிவு கேணல் நிலை அதிகாரியாகவிருந்தார்.

பின்னர் டிசம்பர் 2005 ல் அவர் காலாட்படை பிரிகேடியர் நியமிக்கப்பட்ட அவர் முகமாலை பகுதியில்செப்டம்பர் 2007 வரை பணியாற்றினார். யுத்தத்தின் போது யாழ்ப்பாண பிரதேச சிவில் விவகாரங்கள் மற்றும் நிருவாக ஒருங்கிணைப்பு நடவடிக்கை களுக்கான பொறுப்பதிகாரியாகவும் செயட்பட்டார்.

இவர் 2012 ல் 55 வது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தார்.
மேஜர் ஜெனரல் குலதுங்க, இலங்கை இராணுவ கல்லூரியின் பொறுப்பாளராவும் செயற்பட்டவர்.2018 இல் இலங்கை இலகு காலாட்படையின் Sri Lanka Light Infantry (SLLI) தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.