தென்னாபிரிக்கத் தலைவர் சிறில் ரமபோசா குறுகிய நேர பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று (27) சிறிலங்கா வரவுள்ளார்.
அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்ளும் அவர், சிறிது நேரம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரித்துச் செல்லவுள்ளார்.
தென்னாபிரிக்க தலைவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசவுள்ளார்.
இரு நாட்டு தலைவர்களும் விமான நிலையத்தில் குறுகிய நேரப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்படுகின்றது.