தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை – பசில்

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றியீட்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு முடிவுக்கு வரும். இந்த முடிவுகளில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர் என சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் 08.08 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் அவர்களைத் தவிர்ந்த பல கட்சிகள் எம்முடன் உள்ளன. அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தமக்கு அவசியமில்லை என்றும்  அவர் மேலும் கூறினார்.