ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நிகழ்வு

கின்னஸ் சாதனை படைத்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக சர்வதேச வசதிகளுடன் அமைக்கப்பட்ட ஆனந்தன் நீச்சல் தடாகம் 09.08 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர இந்தத் தடாகத்தை வைபவ ரீதியாக  திறந்து வைக்கவுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சர் மங்கள சமரவீரவின் கோரிக்கைக்கு அமைவாக ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவு சர்வதேச நீச்சல் தடாகத்தை வல்வெட்டித்துறையில் அமைக்க ரூபா 78 மில்லியன் ஒதுக்கப்பட்டு, இந்தத் தடாகம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.