செங்கடலில் தாக்கப்பட்ட மற்றுமொரு கப்பல்

செவ்வாக்கிழமை (26) செங்கடல் பகுதியில் ஏமன் ஹதீஸ் படையினரின் எச்சரிக்கைகளை புறக்கணித்து சென்ற  எம்.எஸ்.சி யுனைட்டட் என்ற கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட கடல் ஏவுகணைத் தாக்குதலில் கப்பல் தீப்பற்றியுள்ளது. தாம் 3 தடவைகள் ஏச்சரித்தபோதும் அதனை கப்பல் மீறியதாக ஏமன் படைத்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எகிப்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பொருட்களை எற்றிச் சென்ற இந்த கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்து கப்பலை காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்க மற்றும் பிரித்தானியா கப்பல்கள் ஈடுபட்டதுடன், கப்பலை அருகில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதேசமயம், இஸ்ரேலின் உம் அல் ரசராஸ் பகுதி மீதும் ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் அமெரிக்காவின் வான்படையினர் ஏமனின் ஆளில்லாத தாக்குதல் விமானங்களை நடுவானில் சுட்டுவீழ்த்தியுள்ளனர்.