சுவிஸில் வேகமாக பரவும் கொறோனா;6,000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு;ஒரேநாளில் 1180 பேரைத் தாக்கியது.

சுவிற்சர்லாந்தில் கொறோனா தோற்று மிக வேகமாகப் பரவிவருகிறது.இன்று இந்த செய்தி எழுதப்படும்வரை 6,113 பேர் இன்று தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்படுகிறது.இதுவரை 58 பேர் உயிரிழந்துதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய நாளில் மட்டும் (20.03.2020) 1180 பேருக்கு கொரோனா தொற்றியமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா அங்கு பரவ ஆரம்பித்தது முதல் நேற்றைய தினத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

மிக கூடுதலாக வோ மாநிலத்தில் 1212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அடுத்ததாக ஜெனிவாவில் 873 பெரும்,திசினோவில் 834 பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சூரிச் மாநிலத்தில் 773,பேரன் மாநிலத்தில் 377 என்றவகையில் தொற்றுக்குள்ளானவர்களின் தொகை காணப்படுகிறது.

இன்றைய நாளில் இச்செய்தி எழுதப்படும்வரை 569 பேர் தொற்றுக்குள்ளாக்கியமை கண்டறியப்பட்டுள்ளது.