சுகாதார விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும்!

பொதுமக்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இலகுவாக வெற்றிபெறலாம் என தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களில் உயிரிழந்தவர்கள் வேறு ஆபத்தான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ், ஆபத்தான நோய்கள் உள்ள நோயாளர்களுக்கு மேலும் ஆபத்தை உருவாக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக  இதய நோய் போன்ற நோயாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம் எனவும் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதுடன், உடல்நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவர்களை நாடவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.