சீனாவில் பூச்சிகள் மூலம் புதிய வைரஸ் தொற்று 7பேர் பலி, 60இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸிலிருந்து தற்போது மீண்டு வரும் நிலையில், புதிதாக தற்போது பூச்சிகள் (நச்சு ஈ, வண்டுகள், உண்ணி) மூலம் பரவும் வைரஸினால் 7பேர் உயிரிழந்துள்ளதுடன், 60இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இந்த வைரஸ் பூச்சிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சீன நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சு மாநிலத்தில் இதுவரை 37இற்கும் மேற்பட்டோரும் அன்ஹூ மாநிலத்தில் 23பேரும் எஸ்.எப்.டி.எஸ் என்னும் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளது என்று ஹிஜியாங் பல்கலைக்கழக மருத்துவர் பேராசிரியர் ஹெங் ஜி பாங் கூறுகையில், ஒரு நோயாளியின் உடலில் இரத்தம், சளி மூலம் மற்றவர்களுக்குப் பரவும் தன்மை உடையது. ஆதலால் மக்கள் புச்சிகள் கடிப்பதிலிருந்து கவனமாக இருத்தல் வேண்டும். இவை தவிர மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸினால் பாதிக்கப்படுவோருக்கு தீவிரமான காய்ச்சல், இரத்த சிவப்பு அணுக்கள் குறைதல், வெள்ளை அணுக்கள் குறைதல், வயிறு தொடர்பான சிக்கல்கள், உடல் தசை வலி, நரம்பு ரீதியான பிரச்சினைகள் போன்றன தோன்றலாம் என்றும் கூறப்படுகிறது.