கோட்டா பெரும்பாண்மை பெற்றால் தமிழர்களிற்கு எதிரான சட்டங்கள் விரைவில்! சத்தியலிங்கம்!!

எதிர்வரும் தேர்தலில் கோட்டாபய அரசு பெரும்பாண்மையை பெற்றால் தமிழர்களிற்கு பாதகமான சட்டங்கள் உருவாகும் முன்னாள் மாகாண அமைச்சரும், தற்போதைய தமிழரசுகட்சியின் வேட்பாளருமான ப.
சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டசெயலகத்தில் நேற்றயதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

நாம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. இருந்தாலும் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக 53 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள்
வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது. இது திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு செயற்பாடு. தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது தமிழ் கட்சிகள் வெற்றிபெறாமல் தேசிய கட்சிகள் ்அல்லது அவர்களிற்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளின் வெற்றிக்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு சதி நடவடிக்கையாகவே இதனை பார்க்க முடியும். அதனை எமது மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர். எனவே தமிழ் கூட்டமைப்பிற்கு வாக்களித்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முயற்சி எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

தற்போதைய அரசாங்கம் பெரும்பாண்மையை பெற்று அதனூடாக காட்டு ஆட்சி ஒன்றை நடாத்துவதற்கும் அவர்கள் நினைத்த சட்டங்களை உருவாக்கி தமக்கு பாதகமான சட்டங்களை இல்லாதொழிப்பதற்கும் அல்லது தமிழ் மக்களிற்கு சாதகமான சட்டங்களை மாற்றி பாதகமான சட்டங்களை உருவாக்குவதற்காக மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெறுவதற்கு பல்வேறு வேலைதிட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

எனவே தேசிய கட்சிகளிற்கோ அல்லது தமிழ்மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சுயேட்சை குழுக்களிற்கோ வாக்களிக்காமல் அவர்களிற்கு தகுந்த பாடத்தை மக்கள் கொடுக்கவேண்டும். கூட்டமைப்பை பலப்படுத்துவதூடாக வன்னி தொகுதியினுடைய மூன்று மாவட்டங்களும் பேரினவாதிகளிற்கு இரையாகமல் இருப்பதற்கு மக்கள் உழைக்கவேண்டிய தேவை இருக்கிறது.
நாம் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடுவோமாக இருந்தால் அம்பாறை மற்றும் திருகோணமலையை போல ஒரு ஆசனத்தை தக்கவைப்பதற்கு ஓடித்திரிய வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே மக்கள் அவதானமாக செயற்படவேண்டும். கோட்டாவின் அரசு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பெறுவதற்கு ஒரு வாக்கினை கூட எமது மக்கள் வழங்க கூடாது. என்றார்.