உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதார தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை செலுத்துங்கள் புதிய அரச பொது ஊழியர் சங்கம் கோரிக்கை

உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதார தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை செலுத்துங்கள் என புதிய அரச பொது ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அச்சங்கத்தின் செயலாளர் இராமன் சித்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவி;த அவர்,

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு முகமாக உலக சுகாதார அமைப்பு மற்றும் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் அறிவுரைகளை பின்னபற்றுமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றோம். எனவே இவ்வைரஸ் தொற்றிலிருந்து எம்மை பாதுகாக்கும் முகமாக சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதோடு எங்களது பகுதிகளுக்கு புதிய நபர்களின் வருகையையும் அரசிடம் தெரிவிக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. மேலும் எங்களது கைகளை சுத்தமாக கழுவ வேண்டியதுடன், மற்றொருவருடன் உரையாடும் போது குறிப்பிட்ட தூரத்திலிருந்து உரையாட வேண்டும்.

வடபகுதியில் உள்ள அனைத்து சுத்திகரிப்பு தொழிலாளர்களும் தங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கமையாற்ற வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு என்பது எங்களுடைய அத்தியாவசிய கடமையாக உள்ளது. எனவே இக்கடமையில் ஈடுபடும் நாங்கள் எங்களை பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. எங்களது தேவைகளை பூரத்தி செய்யும் முகமாக சம்மந்தப்பட்ட திணைக்களங்களில் உள்ள அதிகாரிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளதுடன், அரசும் எங்களுக்கான நன்மைகளை செய்து வருகின்றது.

கொரோனா வைரஸ் தீவிரமடைந்து பலர் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் அத்தியாவசிய தேவையுள்ள திணைக்களங்களின் சேவை முடங்கியிருக்கின்ற வகையிலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் செயற்படும் படி கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் அத்தியாவசிய சேவையை செய்கின்ற உள்ளூராட்சி ஊழியர்களும் மனிதர்கள்என்பதை கருத்திற்கொண்டு அரச அதிகாரிகள் அவர்களையும் மனித நேயத்துடன் உற்று நோக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு இவ் கொரோனா வைரஸ் தாக்காத படியாக கவனம் செலுத்த வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மனிதர்களுடன் அதிகம் பழக வேண்டிய தேவையிருப்பதுடன் அவர்கள் தொட்ட பொருட்களை தொடவேண்டிய தேவையும் உள்ளது.

இத்தொற்று நோயில் இருந்து தடுக்கும் முகமாக திணைக்களங்களில் கைவிரல் அடையாளம் இடும் செயற்பாடு இடம்பெறுகின்றது. இதன் மூலமாக கைவிரல்களில் இருந்து கிருமி தொற்று ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது. எனவே திணைக்களங்களில் பேணப்படும் கைவிரல் அடையாளங்களை தற்காலிகமாக நீக்குமாறும், அவ் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும்; வடமாகாண ஊழியரகள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம். மேலும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தார்.