கொரோனா பெருந்தொற்று பரவலை மறுத்துவந்த  மதகுரு கைது

கொரோனா பெருந்தொற்று பரவலை மறுத்துவந்த  மதகுரு ஒருவரை ரஷ்ய காவல்துறையினர் செய்துள்ளனர்.

அதி தீவிர பழமைவாத சிந்தனை உடையவரான ஃபாதர் செயீர்ஹீ தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெண் துறவிகள் மடத்தில் மேற்கொண்ட சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 ரஷ்யன் ஆர்தோடக்ஸ் திருச்சபையால் மத போதனை செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்ட இவர், கடந்த ஜூன் மாதம் எகாதெரின்பர்க் அருகே உள்ள ஸ்ரெட்னூரல்ஸ்க் எனும் இடத்தில் உள்ள துறவிகள் மடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேற மறுத்து விட்டார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று என்ற ஒன்று இல்லவே இல்லை என்று இவர் மறுத்து வந்த இவர் மீது சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்ள ஊக்குவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள்   பதியப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம், இறை நம்பிக்கை உள்ளவர்கள் பொது சுகாதார ஆணைகளைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று ஊக்குவித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த பின், மே மாதம் சிலுவை அணிவதற்கான உரிமை அவரிடமிருந்து பறிக்கப்பட்டதோடு  மத போதனை செய்வதற்கும் அவருக்கு தடை  விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.