கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய விசாவாசிகளை நாடு கடத்தும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய தற்காலிக விசாவாசிகள் நாடுகடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த கடற்கரை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் பெரும் கூட்டம் கூடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இச்சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி கொண்டாட்டத்தில் பங்கேறற தற்காலிக விசாவாசிகளின் விசா இரத்து செய்யப்பட்டு சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படுவார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.