குர்தீஸ் பெண் அரசியல்வாதி உட்பட 14 பொதுமக்கள் சுட்டுக் கொலை; தொடரும் துருக்கியின் வெறியாட்டம்

குர்து மக்களைக் குறிவைத்து துருக்கி நடத்தி வரும் தாக்குதலில் மேலும் 14 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சிரியாவின் எல்லை நகரான தல் அப்யாதில், துருக்கி ஆதரவு கிளர்ச்சிப் படையினர் 9 பொதுமக்களை சுட்டுக் கொன்றதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் குர்திஸ் ஆதரவு எதிர்கால சிரிய கட்சியின் செயலாளர் நாயகம் ஹெவ்ரின் கலா, அவரது காவலரும் அடங்குவர். .