குப்பைகொட்டுவதை தடுக்க நடராஜர் சிலை வைப்பு

யாழ்ப்பாணம் நல்லுார் – பாணங்குளம் பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தவிர்ப்பதற்காக நடராஜர் சிலை  ஒன்று அப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த சிலை வைக்கப்பட்டதன் பின்னரும் அப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது.

யாழ்.மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியில் நல்லூர் பாணாங்குளம் அமைந்துள்ளது. அதனைச் சூழ தொண்டு நிறுவனங்கள் உள்பட குடியிருப்புகள் உள்ளன.

image0 5 குப்பைகொட்டுவதை தடுக்க நடராஜர் சிலை வைப்பு

இந்த நிலையில் அந்தப் பகுதியில் வெளியில் இருந்து வரும் நபர்களால் குப்பைகள் போடப்படுவதாக பல தரப்பினரிடமும் முறையிடப்பட்டது.

பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க முடியவில்லை. அதனால் குப்பைகள்  கொட்டப்படும் இடத்தில் திடீரென நடராஜப் பெருமானின் சிலை ஒன்று வைக்கப்பட்டது.

அந்த சிலையை இன்று அவதானிக்க முடிந்தது. எனினும் சிலை வைக்கப்பட்ட பின்பும் அந்தப் பகுதியில் குப்பைகள்  கொட்டப்படுகின்றன.