கார்த்திகை தீபம் ஏற்றுவதையும் தடைசெய்ய முயன்ற படையினர்

யாழ். மாவட்டத்தில் இணுவில் கந்தசாமி கோவில், மல்லாகம் சாலம்பை முருகன் ஆலயங்களில் கார்த்திகை தீபங்கள் ஏற்ற படையினர் தடை விதித்த நிலையில் நிர்வாகத்தினரின் முயற்சியினால் இறுதியில் அதற்கு அனுமதிக்கப்பட்டது.

கார்த்திகைத் தீபத்திருநாளான இன்றைய தினம் வீடுகள் ஆலயங்களில் தீபம் ஏற்றதயாரான நிலையில் பல இடங்களில் படையினர், பொலிஸார் தடை விதித்தனர்.

இன்றைய தீபம் ஏற்றலிற்கும் மாவீரர் நாளிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது எனவும் இன்றைய தீபம் சைவ மக்களின் வழிபாடு என்பதைத் தெளிவுபடுத்திய பின்னர் அதற்கான அனுமதியை படையினர் வழங்கினார்கள்.