இந்தியாவில் இது வரையில் கொரோனாவுக்கு ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பலி

கொரோனாவால் இந்தியாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது. 

அதே நேரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  93 லட்சத்து 92 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை  இந்தியாவில் 13.95 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 12 இலட்சத்து 83 ஆயிரத்து 449 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஓகஸ்ட் 7-ம் திகதி கொரோனா பாதிப்பு 20 இலட்சத்தையும், 23-ம் திகதி 30 இலட்சத்தையும், செப்டம்பர் 5-ம் திகதி 40 இலட்சத்தையும் எட்டியது.

முன்னதாக செப்டம்பர் 16-ம் திகதி 50 இலட்சத்தையும், 28-ம் திகதி 60 இலட்சத்தையும், ஒக்டோபர் 11-ம் திகதி 70 இலட்சத்தையும் தொட்டது. 29-ம் திகதி 80 இலட்சத்தையும், நவம்பர் 20-ம் திகதி 90 இலட்சத்தையும் கடந்துள்ளது”. என்று கூறப்பட்டுள்ளது.