கொரோனா தொற்று –  கொழும்பில் மாத்திரம் 81பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால்  கொழும்பில் மாத்திரம் 81பேர், உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இது வரையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,கொரோனாவுக்கு இன்று இருவர் மரணமானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம்  இது வரையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமானவர்களின் தொகை 109 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.