எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. அத்துடன் அவர்கள் கட்சிகளின் தேசிய பட்டியலிலும் இடம்பறவில்லை. முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய, சாகல ரத்னாயக்க, நிசாந்த முத்துயஹட்டிகம,மயந்த திஸநாயக்க, வசந்த சேனநாயக்க மற்றும் எஸ்.பி நாவின்ன ஆகியோரே அவர்களாவர்.
ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபட்டதனால் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய முடிவெடுத்துள்ளார். அதேபோன்று சாகல ரத்னாயக்க போட்டியிடுவதற்கு கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மயந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவுசெய்துள்ளார்.
இதேவேளை நிசாந்த முத்துயஹட்டிகமவிற்கு பொது ஜன பெரமுனவிலிருந்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை.இவர் காலி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு எதிர்பாரத்திருந்தார். தேர்தல் ஆணையகத்தின் தகவல்களின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்து 3652 வேட பாளர்களும் சுயேச்சைக்குழுக்களில் இருந்து 3800 வேட்பாளர்களும் என மொத்தம் 7452 பேர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.அதாவது 924 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 352 பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்தும் 572 பேர் சுயேச்சைக்குழுக்களில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.