கனடா பிரதமர் இந்தியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை

கனடா பிரதமர் இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கொரோனா பிரச்சினை நிலவரம், சீன இந்திய எல்லைப் பிரச்சினை மற்றும் இரு நாட்டு உறவுகள் தொடர்பாக பேசியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ளது. அதில், சீன இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நிகழும் பிரச்சினைகள் தொடர்பாகவும்,  உலக நாடுகள் தொடர்பாகவும் இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018இல் சீனத் தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவேயின் மூத்த அதிகாரி கைது செய்யப்பட்டதையடுத்து, சீனா அதிகாரபூர்வமற்ற பொருளாதார தடைகளை கனடா மீது போட்டுள்ளது. தூதரக அதிகாரி உட்பட 2 கனடா நாட்டினரை தன்னிச்சையாக கைது செய்து சீன நீதிமன்றம் ஊடாக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியர்களை திருப்பி அனுப்புவதற்கு கனடா வழங்கிய உதவியை பிரதமர் மோடி அன்புடன் பாராட்டினார். இவ்வாறு இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இரு நாட்டு எல்லைப் பிரச்சினை பற்றி பேசியதாக குறிப்பிடப்படவில்லை.

மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற இடத்திற்கு கனடா வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. அதற்கான ஆதரவைக் கோரி பல்வேறு நாட்டு தலைவர்களை கனடா பிரதமர் ட்ரூடோ கடந்த சில நாட்களாக பேசிவருவது குறிப்பிடத்தக்கது.