சீனாவிற்கு பதிலடி கொடுப்போம் பிரதமர் மோடி

இந்திய சீன எல்லைப் பகுதியான லடாக்கில் கொல்லப்பட்ட 20 இராணுவ வீரர்களுக்கு 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்திய இந்தியப் பிரதமர், சீனாவிற்கு எந்தக் காலத்திலும் பதிலடி கொடுப்போம் எனத் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் போது லடாக் பகுதியில் கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தியதுடன், சீனாவிற்கு எந்தக் காலத்திலும் பதிலடி கொடுப்போம் என்று உரையாற்றினார்.

மாநிலங்கள் ரீதியாக கொரோனா தொற்று தொடர்பாக மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். அவர் மேலும் கூறுகையில், பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது. சரித்திரத்திலும் நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம். வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது என்று கூறினார்.