ஏமன் போர் நடவடிக்கைகளுக்கு இனி ஆதரவு  இல்லை – அமெரிக்கா  முடிவு

ஏமனில் தனது கூட்டணி நாடுகள் ஈடுபட்டுவந்த போர் நடவடிக்கைகளுக்கு அமரிக்கா தந்துவந்த அதரவை நிறுத்தப்போவதாக அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

“ஏமன் போர் நிறுத்தப்படவேண்டும்” என அமெரிக்க அதிபர் பைடன் தனது முதல் வெளிநாட்டு கொள்ளைகள் குறித்த உரையில் தெரிவித்தார். இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட நிலையில், ஏமன் போருக்கான ஆதரவை நிறுத்தப் போவதாக பைடன் தெரிவித்துள்ளார்.

ஏமனில் கடந்த ஆறு வருடங்களாக நடந்து வரும் போரில் கிட்டதட்ட ஒரு இலட்சத்து 10 ஆயிரம் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.