எல்லை பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்தியா- சீனா இணக்கம்

தமது எல்லைப் பிரச்சனையை அமைதியான வழிகளில் பேசித் தீர்ப்பதற்கு சீனாவும் இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனா படையினர் இந்திய எல்லைக்குள் கடந்த மாதம் 3 தடவைகள் அத்துமீறி நுளைந்ததாக இந்தியா குற்றம் சுமத்தியதை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது. எனினும் பேச்சுக்களுக்கு முன்னர் இரு நாட்டு இராணுவங்களும் எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் குவித்துள்ள படைத்தளபாடங்களை அங்கிருந்து அகற்றவேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.