எல்லைப் பிரச்சினை: இந்தியா, சீனா இடையே பேச்சு தொடரும்- ஜெய்சங்கர்

“எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண, இந்திய மற்றும் சீன இராணுவ அதிகாரிகளின் பேச்சு வார்த்தை தொடரும்” என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் கூறியதாவது,

“சிக்கலான பிரச்னை எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிகளில், இந்தியா மற்றும் சீன அதிகாரிகள், ஈடுபட்டு வருகின்றனர். இராணுவ வீரர்களை, எல்லையில் இருந்து திரும்பப் பெறுவதற்கு பேச்சுகள் நடக்கின்றன. இதுவரை, ஒன்பது கட்ட பேச்சுகள் நடந்துள்ளன. இராணுவ வீரர்கள் தொடர்பானது என்பதால், இது மிகவும் சிக்கலான பிரச்னை. எந்த பகுதியில், வீரர்கள் உள்ளனர். எல்லையில் என்ன நடக்கிறது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அறிந்திருக்கவேண்டும்.

அந்த தகவல்களை சேகரிக்கும் பணிகளில், இராணுவ தளபதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடந்த பேச்சில், சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நம்புகிறோம். இருதரப்பு எனினும், தீர்வு எட்டப்படவில்லை. தொடர்ந்து இருதரப்பு இராணுவ அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். அந்த பேச்சு, தொடர்ந்து நடக்கும்” என்றார்.