முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு சுயகௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்தக்கோரி கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினையும் இன்று அனுப்பி வைத்துள்ளனர்
குறித்த மகஜரை கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் இணைந்து அரச அதிபரிடம் மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று கையளித்தனர்.