ஈழத் தமிழருக்காக உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் நினைவு நிகழ்வு

தமிழீழத்தில் 2008 – 2009ஆம் ஆண்டில் இந்திய அரசின் துணையோடு சிங்கள இனவெறி அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரை நிறுத்தக் கோரி தீக்குளித்து உயிரீகம் செய்த தழல் ஈகி கு. முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும்  சனவரி 29 அன்று  சென்னை கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் நினைவுத் தூண் எழுப்பி  வீரவணக்க நிகழ்வு நடைபெறுகின்றது.

இவ்வாண்டு – நாளை –  2021 சனவரி 29 வெள்ளிக்கிழமை காலை – முத்துக்குமார் தீக்குளித்த நேரமான  10.07 மணிக்கு அங்கு நடைபெறும்  வீரவணக்க நிகழ்வில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் அவர்கள் பங்கேற்கிறார்.

தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் நடைபெறும் முத்துக்குமார் நினைவு நாள் கூட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்!

இந்நிகழ்வுகளில் தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் குறித்த நேரத்தில் வந்து அவசியம் கலந்து கொள்ளும்படி அழைக்கப்பட்டுள்ளார்கள்.