இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மூன்று தஞ்சை மீனவர்களை தனிமைப்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கடந்த 5ஆம் திகதி தஞ்சை மாவட்டம் கள்ளிவயல் தோட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற  சக்திவேல், பாலமுருகன், மணிபாலா ஆகிய மூன்று மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்திருந்தனர்.

 இன்று (08)மீனவர்களின் வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் யாழ்பாணம் மீன் வளத்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டது.

காணொளி மூலம் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி, அலெக்ஸ்  ராஜா கிரேசின் மீனவர்கள் மூவரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் உள்ள மீனவர்களின் படகில்  வரும் 22-ஆம் திகதி வரை தனிமைப்படுத்தி வைக்க உத்தரவிட்டார்.

மேலும் மீனவர்களுக்கு நாளை கொரோனா பி சி ஆர்  பரிசோதனை மேற்கொண்டு, அதற்கான பரிசோதனை முடிவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.