இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளின் பயணிகளுக்கு கட்டார் புதிய உத்தரவு

இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று கடடார் அறிவித்துள்ளது.

கட்டாரின் பொது சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவித்தலில், வங்கதேசம், நேபாளம்,பாகிஸ்தான், மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் விடுதிகளின் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவி வரும் புதிய கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பை அந்நாடு வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 48 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் பரிசோதனை ஒன்றை செய்திருக்க வேண்டும் என்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய வேண்டும் என்றும் கட்டாரின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.