இலங்கையில் ஒரே நாளில் மூவர் கொரோனா வைரஸ் பலியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்பஹா மாவட்டம், ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயது ஆண் ஒருவர் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று பகல் உயிரிழந்துள்ளனர். கொழும்பு – வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரும், கொழும்பு – கொம்பனித்தெருவைச் 65 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இலங்கையில் கொரோனாத் தொற்றால் இன்று மட்டும் மூவர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.