இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 581 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்  இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் சீனத் தயாரிப்பான கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோவிட் தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இவை முதலில் இந்நாட்டிலுள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் இதனை இலங்கைக்கு வழங்கியிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 லட்சம் தடுப்பூசிகள் கடந்த 31 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.