தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
மண்மேடு சரிந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் சரிந்து வீழ்ந்துள்ளதாக நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய பருவகால யாத்திரையல்லாத காலத்தில் சிவனொளிபாத மலையின் உச்சிக்கு செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இடிக்கட்டுபான ஊடாக இரத்தினபுரி பாதைக்குச் சென்று அதனை அடைய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் சீரற்ற வானிலை நிலைமை குறைந்து சீரான வானிலை நிலவும் சந்தர்ப்பத்தில் அப்பாதையில் சரிந்து விழுந்த மரங்களையும் மண் மேட்டையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் நல்லத்தண்ணி காவல்துறையினர்குறிப்பிடுகின்றனர்.



