இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 45 பேர் மரணம்; மொத்த உயிரிழப்பு 2,814

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 27 ஆண்களும், 18 பெண்களும் அடங்குகின்றனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது.