இலங்கைக்கு நன்கொடையாளர்களின் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்த IMF முயற்சி

இலங்கை போன்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு நன்கொடையாளர் ஒருங்கிணைப்பை விரிவாக்கும் வழிகளைத் தேடுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பொன்றில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மிகவும் பயனுள்ள கடன் தீர்வு பொறிமுறைக்கும் வலியுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.