இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த , ரிஹானா, கிரெட்டா

இந்தியாவில் நடந்த விவசாயிகளின் போரட்டத்திற்கு ஆதரவாக பாடகி ரிஹானாவும், சுற்றுச் சூழல் செயற்பாட்டாளரான  கிரெட்டா தன்பெர்க்கும் சர்வதேச அளவில் குரல் கொடுத்து உள்ளனர்.

மத்திய அசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு அதிகப்பாதிப்பெனக்கூறி, அதை இரத்துசெய்யக் கோரி  விவசாயிகள்  இரு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாயிகளுக்கு இடையே நடைபெற்ற அனைத்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன.

இந்நிலையில் போராட்டத்திற்கு காவல்துறையினர் பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டம் குறித்து,சர்வதேச அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.

பாடகி ரிஹானாவும், சூழியல ஆர்வலரான  கிரெட்டா தன்பெர்க்கும் விசாயிகளின் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில், “ நாம் இதைப் பற்றி ஏன் பேசவில்லை?” என்று பதிவிட்டு , விவாசயிகள் போராட்டம் தொடர்பான செய்தியையும் பகிர்ந்துள்ளார்.

கிரெட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “ இந்திய விவசாயிகளின் போராட்டதிற்கு ஒத்துழைப்பு தருவோம்” என்று பதிவிட்டுள்ளார்.